வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்
பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி - பத்தொன்பது
கோள்களின் பார்வை பலன்கள் தொடர்ச்சி…
9. சந்திரன் வர்க்கோத்தம நிலையில் இருந்து,
அதன் சொந்த நவாம்சத்திலோ அல்லது வேறு நவாம்சத்திலோ இருந்தால், சந்திரனானது பல்வேறு
நவாம்சத்தில் இருந்து பல்வேறு கோள்களால் பார்க்கபடுவதால் ஏற்படும் நற்பலன்கள் என்பது
அவைகளுக்கு ஏற்ப முழுமையாக, அல்லது முற்றிலும் இல்லாமல் அல்லது குறைவாக இருக்கும்;
அதுபோல் தீய பலன்கள் என்பது குறைவாக அல்லது முற்றிலும் இல்லாமல் அல்லது முழுமையாக இருக்கும்(1).
நவாம்ச அதிபதி வலிமை மிக்கதாக இருந்தால், நவாம்சத்தினைக் கோள்கள் பார்க்கப்படுவதால்(2)
ஏற்படும் பலன்கள் மட்டுமே கிடைக்கும், சந்திரன் இருந்து கோள்கள் பார்ப்பதால் கிடைக்கக்கூடிய
பலன்கள் கிடைக்காது.
குறிப்பு:
(1) இதே குறிப்புகள் உதய இராசிக்கும் மற்றும் சூரியன்
குறிப்பிட்ட நவாம்சத்தில் இருந்து பல்வேறு கோள்களால் பார்க்கப்படுவதால் ஏற்படும் பலன்களுக்கும்
பொருந்தும்.
(2) சந்திரன் இருக்கும் நவாம்சங்கள் அல்லது உதய
நவாம்சம் மற்றும் கோள்களால் பார்க்கப்படுதல்.
கோள்களின்
பார்வைகளின் பலன்கள் – முற்றும்
அடுத்து - பகுதி-20 - பாவங்களில்
கோள்கள்
முதன்மை (சமஸ்கிருதம்)
|
ஆங்கிலம்
|
தமிழ்
|
வராக மிகிரர்
|
திரு N. சிதம்பரம் அய்யர்
|
நிமித்திகன்
|
கி.பி. 505
– 587
|
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
|
2014-17
|
No comments:
Post a Comment