Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Sunday, May 28, 2017

நவாம்ச சந்திரனின் பலன்கள்(2) - பிருகத் ஜாதகா – 149


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பத்தொன்பது

கோள்களின் பார்வை பலன்கள் தொடர்ச்சி…


6. பிறக்கும் நேரத்தில், சந்திரனானது புதனின் நவாம்சத்தில் இருந்து, அது சூரியனால் பார்க்கப்பட்டால், அந்த மனிதர் கலைஞர் அல்லது நாட்டியக்காரராக இருப்பார்; செவ்வாயால் பார்க்கப்பட்டால், அவர் திருடராக இருப்பார்; புதனால் பார்க்கப்பட்டால் பெருங்கவிஞராக இருப்பார்; வியாழனால் பார்க்கப்பட்டால், அவர் அமைச்சராக இருப்பார்; வெள்ளியால் பார்க்கப்பட்டால், இசையில் திறமை மிக்கவராக இருப்பார், சனியால் பார்க்கப்பட்டால், எந்திரதொழில் நுட்பத்தில் சிறந்து விளங்குவார்.


பிறக்கும் நேரத்தில், சந்திரனானது கடக நவாம்சத்தில் இருந்து, அது சூரியனால் பார்க்கப்பட்டால், அந்த மனிதர் சிறு உடலமைப்பு கொண்டவராக இருப்பார்; செவ்வாயால பார்க்கப்பட்டால் அவர் ஒரு கருமியாக இருப்பார் அல்லது குறைவான செல்வம் கொண்டிருப்பார்; புதனால் பார்க்கப்பட்டால் யோகக்கலையில் ஈடுபாடு கொண்டவராக இருப்பார்; வியாழனால் பார்க்கப்பட்டால், ஒரு தலைவராக இருப்பார்; வெள்ளியால் பார்க்கப்பட்டால் பெண்களால் வளம் பெறுவார்; சனியால் பார்க்கப்பட்டால் வேலையில் ஆர்வம் கொண்டவராக இருப்பார்.


நவாம்ச சந்திரனின் பலன்கள்.. தொடரும்


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



No comments: