Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Friday, May 5, 2017

இராசியில் செவ்வாயின் பலன்கள் - பிருகத் ஜாதகா – 136


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பதினெட்டு


இராசிகளில் பிறக் கோள்கள் தொடர்ச்சி…


5. மேசம் அல்லது விருச்சிகத்தில் செவ்வாய் இருக்கும்போது பிறந்த ஒருவர், அரசரால் மதிக்கப்படுபவராக இருப்பார்; இயற்கை விரும்பியாக இருப்பார்; இராணுவத் தலைவராக இருப்பார்; வணிகராக, வசதி மிக்கவராக இருப்பார்; உடலில் காயங்கள் இருக்கும்; திருடராக இருப்பார்; சமயோத புத்தியால் மகிழ்ச்சி அடைபவராக இருப்பார்.


ரிசபம் அல்லது துலாத்தில் செவ்வாய் இருக்கும் போது பிறந்த ஒருவர், பெண்களுக்கு கட்டுப்பட்டு நடப்பார்நண்பர்களின் அறிவுரையினைக் கேட்பதில் தயக்கம் காட்டுவார்; பிறரின் மனைவியரின் மீது ஆர்வம் கொண்டிருப்பார்; மந்திர தந்திர விளையாட்டுகளை கற்றறிந்தவராக இருப்பார்; அலங்கரித்துக் கொள்வதில் ஆர்வம் கொண்டிருப்பார்; பயந்த சுபாவம் கொண்டிருப்பார்; கரடுமுரடான உடலமைப்பு கொண்டிருப்பார்.


6. மிதுனம் அல்லது கன்னியில் செவ்வாய் இருக்கும்பொது பிறந்த ஒருவர் நல்ல தோற்றம் கொண்டிருப்பார்; குழந்தைகள் இருக்கும் ஆனால் நண்பரகள் இருக்காது; பிறருக்கு உதவுபவராக இருப்பார்; இசையிலும் சண்டையிலும் திறமையானவராக இருப்பார்கருமியாக இருப்பார்; பயமற்றவராகவும் யாசகம் செய்யும் குணம் கொண்டவராகவும் இருப்பார்.


கடகத்தில் செவ்வாய் இருக்கும்போது பிறந்த ஒருவர் வசதி படைத்தவராகவும், கடல் கடந்து சென்று செல்வம் சேர்ப்பவராக இருப்பார்; அறிவாளியாக இருப்பார்; உடல் குறைபாடு உடையவராக இருப்பார்; பொல்லாதவராக இருப்பார்.


இராசிகளில் பிறக் கோள்கள் தொடரும்…


முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



No comments: