Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Saturday, May 6, 2017

செவ்வாயின் பலன்கள்.. தொடர்ச்சி - பிருகத் ஜாதகா – 137


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பதினெட்டு


இராசிகளில் பிறக் கோள்கள் தொடர்ச்சி…

7. சிம்மத்தில் செவ்வாய் இருக்கும்பொது பிறந்த ஒருவர் ஏழையாகவே இருப்பார்துயரங்களை பொறுமையாக பொருத்தாள்வார்காடுகளில் அலைவதை விரும்புவார்; பயமற்றவராக இருப்பார்; இரண்டிற்கு மேற்பட்ட மனைவியரும் கொஞ்சம் குழந்தைகளும் கொண்டிருப்பார்.


தனுசு அல்லது மீனத்தில் செவ்வாய் இருக்கும்போது பிறந்த ஒருவர் நிறைய எதிரிகளைக் கொண்டிருப்பார்;  அரசனின் அமைச்சராக இருப்பார்; பரந்த புகழ்பெற்றவராக இருப்பார்; பயமற்றவராக இருப்பார்; குறைந்த அளவிலான குழந்தைகள் கொண்டிருப்பார்.


கும்பத்தில் செவ்வாய் இருக்கும்போது பிறந்த ஒருவர் எப்போதும் துன்பத்திலேயே இருப்பார்; ஏழையாக இருப்பார்; இடம் விட்டு இடம் நகரக்கூடியவராக இருப்பார்; பொய்யராக இருப்பார்; தன்னிச்சையானவராகவும் பாவியாகவும் இருப்பார்.


மகரத்தில் செவ்வாய் இருக்கும்போது பிறந்த ஒருவர் மிகுந்த வசதிபடைத்தவராக இருப்பார்நிறைய ஆண்குழந்தைகள் இருக்கும்; அரசராகும் வாய்ப்பு இருக்கும் அல்லது அரசருக்கும் நிகரானவராக இருப்பார்.



இராசிகளில் பிறக் கோள்கள் தொடரும்

முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



No comments: