Concept

சோதிடம் என்பது எப்பொழுதும் சர்ச்சைக்குரிய பொருளாகவே உள்ளது. உண்மை எனும்போது நம்பகத் தன்மையின் அளவீடு முழுமைப் பெறுவதில்லை. இல்லை எனும்போது சில எதிர்மறைக் கருத்துக்கள் பொய்த்து விடுகின்றன. உண்மையா ? பொய்யா ? உங்களின் துணையோடு இதை ஆராய்வதே இந்த வலைப் பூவின் நோக்கம்.

o0o0o0o0o0o0o00o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o00o0o0o0o0

[இதில் வரும் பதிவுகளை, முதல் பதிவிலிருந்து வரிசையாகப் படிக்கவும். ஆய்வு நோக்கில் இத் தொடர் எழுதப்படுவதால், முன் பதிவுகளைப் படிக்காதவர்கள், அவைகளைப் படித்தபின் தொடர்ந்தால், தொடர்ச்சியாக இருக்கும்.].

0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0o0oo0o0o0o0o0o0o0o0o0o0o0

Thursday, May 11, 2017

இராசியில் சுக்கிரனின் பலன்கள் - பிருகத் ஜாதகா – 141


வராக மிகிரரின் பிருகத் ஜாதகா
திரு N. சிதம்பரம் அய்யர் அவர்களின்
ஆங்கில மொழிபெயர்ப்பின் தமிழாக்கம்




பிருகத் ஜாதகா
பாகம்-2
பகுதி   -  பதினெட்டு

இராசிகளில் பிறக் கோள்கள் தொடர்ச்சி…


14.  மேசத்தில் அல்லது விருச்சிகத்தில்  சுக்கிரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் பிறர் மனைவியின் மீது மோகம் கொண்டவராக இருப்பார்; அத்தகையவர்களின் செல்வாக்கால் தன் சொத்துக்களை இழப்பார்; அவரது குடும்பத்திற்கு இழுக்கினை ஏற்படுத்துவார்.


ரிசபம்  அல்லது துலாத்தில்  சுக்கிரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் தனது சொந்த திறமையாலும் அறிவாற்றலாலும் சொத்துக்களைச் சேர்ப்பார்; அரசரால் விரும்பப்படுவார்; உறவினர்களிடையே முக்கியத்துவம் வாய்ந்தவராக இருப்பார்; புகழ்பெற்றவராக இருப்பார்; பயமற்றவராக இருப்பார்.


15. மிதுனத்தில்  சுக்கிரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் அரசரின் வேலையைச் செய்வார்; செல்வந்தராக இருப்பார்; இசையைக் கற்றறிந்து இருப்பார்.


கன்னியில்  சுக்கிரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் கடின உழைப்பாளியாக இருப்பார்.


மகரத்தில்  அல்லது கும்பத்தில்  சுக்கிரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் அனைவராலும் விரும்பப்படுபவராக இருப்பார்; பெண்களின் செல்வாக்கிற்கு கட்டுப்பட்டவராக இருப்பார்; சராசரி பெண்களின் மீது மோகம் கொண்டவராக இருப்பார்.


16. கடகத்தில்  சுக்கிரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் இரு மனைவிகளைக் கொண்டிருப்பார்; பிச்சைக்காரராக இருப்பார்; பயந்தவராகவும் கோழையாகவும் இருப்பார்; துயரங்களை அனுபவிப்பார்.


சிம்மத்தில்  சுக்கிரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் பெண்களின் மூலம் பணம் சம்பாதிப்பார்; திறமையான மனைவியைக் கொண்டிருப்பார்; குறைவாக குழந்தைகளைக் கொண்டிருப்பார்.


தனுசுவில் சுக்கிரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் நல்ல குணங்களைக் கொண்டிருப்பார்; செல்வந்தராக இருப்பார்.


மீனத்தில் சுக்கிரன் இருக்கும்போது பிறந்த ஒருவர் கற்றறிந்தவராக இருப்பார்; செல்வந்தராக இருப்பார்; அரசரால் மதிக்கப்படுபவராக இருப்பார்; அனைவராலும் விரும்பப்படுபவராக இருப்பார்.

இராசிகளில் பிறக் கோள்கள் தொடரும்…

முதன்மை (சமஸ்கிருதம்)
ஆங்கிலம்
தமிழ்
வராக மிகிரர்
திரு N. சிதம்பரம் அய்யர்
நிமித்திகன்
கி.பி. 505 – 587
1885-ல் பதிப்பிக்கப்பட்டது
2014-17



No comments: